பல்சுவை உணவகம்

Blogger Widgets

06 அக்டோபர், 2012

நான் படித்தது 3

உலகின் பெரிய வழிபாட்டுத்தளம்/தலம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?
ஆம் அது தான் "கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய "அங்கோர் வாட்" கோயில். இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான்.இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது .ஒரு பெருமையான விஷயம் சொல்லட்டுமா ?, "விஷ்ணு" கடவுளுக்காக கட்டப்பட்
ட இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே " பெரியது "! !.இந்த கோயிலை ஒரு கலை பொக்கிசம் என்றே கூறலாம்,திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர் . இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் சுற்றி சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள் !!! இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட "சூர்யவர்மன்" இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது .இதன் பின்னர் ஆறாம் "ஜெயவர்மன்" கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக "புத்த" வழிபாடு தளமாக மாற்றப்பட்டு.இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது !.பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது , அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதைவடையத்தொடங்கியது.பின்னர் 1586 ஆம் ஆண்டு " António da Madalena " என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது ,அதை அவர் " is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of." என்று கூறியுள்ளார்.பின்னர் Henri Mouhot' என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெயிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது .அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged." என்று குறிப்பிட்டுள்ளார் !! .பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது!!.இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார்.ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது இதில் இன்னொரு சிறப்பு "கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் "தேசிய சின்னமாக" பொறிக்கப்பட்டுள்ளது !.இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம்,ஆனால் இப்போதைய கால சூழ்நிலையில் இதை படிப்பதற்கே சிரமம் என்பதால், இதை இதோடு முடித்துக்கொள்கிறேன். கடைசியாக ஒன்று இந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை !! வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்த்ல் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது !! இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை ! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே !!

நன்றி சசி தரன்
இந்த தகவலை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்

நான் படித்தது 2

எல்லோருக்கும் உலகம் முழுவதும் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அவ்வாறு உலகைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் போது, நமக்கு பிடித்த, சற்று வித்தியாசமான இடங்களைத் தான் பார்க்க விரும்புவோம். அத்தகைய வித்தியாசமான சுற்றுலாத்தளங்களில், அவ்வப்போது இயற்கைக்குப் புறம்பாக நடந்த விபத்துக்களில் ஒரு சில இடங்கள் கண்ணைப் பறிக்கும் வகையில் சற்று வித்தியாசமாகவும் கவர்ச்ச
ிகரமாகவும் மாறியுள்ளது. இப்போது அத்தகைய இடங்களில் ஒரு 5 அபூர்வமான இடங்களைப் பற்றி பார்ப்போம்

எரிமலைக் குளம்:
இந்த குளம் இயற்கைப் பண்புகளுக்கு அப்பாற்பட்ட ஒரு வித்தியாசமான இடங்களில் ஒன்றாகும். இந்த இடம் பம்முக்ளே (Pamukklae) என்னும் இடத்தில், எரிமலையின் வெடிப்புகள் காரணமாக நீரூற்று ஏற்பட்டு, அதன் பக்கவாட்டில் கால்சியம் கார்பனேட் அதிக அளவு சேர்ந்து குளம் போல் உருவாக்கியுள்ளது. இந்த குளத்திற்கு ட்ரேவெர்டின் குளம் (Travertine Pool) என்று பெயர். மேலும் இந்த குளம் சற்று சரிவாக படிக்கட்டுகள் போன்று அமைந்துள்ளது

புள்ளி புள்ளியாக காணப்படும் ஏரி:
இந்த சலைன் அல்கலி ஏரி (saline alkali lake) பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒசொயூஸ் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் நீரில் 8-10 கனிமங்கள் உள்ளன. இதனால் கோடை காலத்தில் இங்கு தண்ணீர் ஆவியாகி, அந்த கனிமங்களுடன் சேர்ந்து, நீரின் மேற்பரப்பில் புள்ளிப் போன்ற ஒரு தோற்றத்தை தருகிறது. இதனால் அந்த ஏரி பார்க்க ஓட்டை ஓட்டையாக இருப்பது போன்று காணப்படும்


கற்கள் தானாக நகரும் வறண்ட இடம்:
இந்த இடத்திற்கு ரேஸ்ட்ராக் பால்யா (Racetrack Playa) என்று பெயர். இது கலிபோர்னியாலிவல் உள்ள ஒரு வறண்ட ஏரி என்றாலும், கண்ணுக்கினிய ஒரு விஷயம் உள்ளது. அது என்னவென்றால், இந்த இடத்தில் இருக்கும் கற்கள் தானாக நகர்கிறது என்பது தான். மேலும் அவ்வாறு நகரும் கற்கள் நகர்ந்ததற்கான அடையாளத்தோடு நகர்கிறது என்பது தான் இதன் சிறப்பு. அதிலும் இந்த கற்கள் பலத்த காற்றின் காரணமாக நகர்கிறது என்பது உண்மை. அப்படியெனில் எந்த அளவு காற்றடிக்கும் என்று யோசித்து பாருங்களேன்...


சஹாரா பாலைவனம்:
உலகில் உள்ள வித்தியாசமான இடங்களில் சஹாரா பாலைவனத்தில் உள்ள ரிச்சட் வடிவம் (Richat Structure) ஒன்று. சொல்லப்போனால், அதை சஹாராவின் கண் என்று சொல்லலாம். ஏனெனில் இந்த இடத்தின் அமைப்பு பரந்த, விரிந்த பாலைவனத்தில் வண்ணமயமாக இருப்பதோடு, மேலும் பார்த்தால் கண்கள் சலிக்காமல் பார்க்கும் அளவுக்கு அமைந்துள்ளது.


வித்தியாசமான தீவு:
இந்த பூமியில் இருக்கும் தீவுகளில் இந்தியப் பெருங்கடலில் உள்ள சோகோட்ரா தீவு (Socotra Islands) ஒரு புதிரான இடம். ஏனெனில் இந்த தீவுகளில் உள்ள அனைத்து மரங்களும், விலங்குகளும் வித்தியாசமான வடிவத்தோடு காணப்படும். இது போன்ற வடிவம் கொண்ட மரங்கள் மற்றும் விலங்குகளை எங்கும் காண முடியாது என்பதே இதன் சிறப்பு

இவையே உலகில் உள்ள விசித்திரமான மற்றும் புதிரான இடங்கள். மேலும் இந்த இடங்கள் உலக சுற்றுலா பயணம் செல்லும் போது பார்க்க வேண்டும் என்று தோன்றும் ஒரு சிறந்த இடங்களாக அமையும். இதை போன்ற வேறு இடங்கள் உங்களுக்கு தெரிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளவும்

நான் படித்தது 1

நாம் தெய்வத்தை தொழுவது சிறப்புக்குரியதா அல்லது மகான்களை வணங்கவது சிறப்புக்குரியதா என பார்க்கும் போது, இறைவனை வணங்குவது எவ்வளவு சிறப்போ அதனினும் சிறப்பு இறைவனுடைய அடியார்களை போற்றுதலும் வணங்குதலும் என்பதை சைவ – வைணவ சாஸ்திரங்கள் சொல்லும் உண்மை.

கடலில் பெரிய கல்லை போடுகிறோம் அது உடனே தண்ணீர்க்குள் போய்விடும். அதே கல்லை ஒரு கட்டையின் மேல் வைத்து கடலில் விட்டால் கட்டையோடு அந்த கல்லும் மிதந்துகொண்டு ச
ெல்லும் – முழ்காது. அதைபோல்தான் இறைவனை வணங்குபவர்களும் மகான்களையும் வணங்கினால் துன்ப கடலில் நாம் முழ்கிவிடாமல் இருக்க இறைவனின் ஆசி அவர்களின் வேண்டுதலின் மூலமாக சுலபமாக கிடைக்கிறது. இறைவன் சில சமயம் மனித ரூபத்தில் திகழ்கிறார். அந்த மனிதர்களையே மகான்களாக நாம் போற்றுகிறோம். வள்ளலாரின் மகிமையை பற்றி.


                                         
Related Posts Plugin for WordPress, Blogger...
Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner