பல்சுவை உணவகம்

Blogger Widgets

01 நவம்பர், 2012

டெங்கு கொசுவை ஒழிக்க ஒரு எளிய வழி...


டெங்கு காய்ச்சலுக்கு மூலகாரணமாக இருக்கும் கொசுக்களை ஒழிக்க நாமும் பல வழிகளில் போராடித் தோற்றும் விட்டோம். இதோ ஒரு எளிய அதிக செலவில்லாத ஒரு வழி! முயற்சி செய்து தான் பாருங்களேன்.

Step1

ஒரு 2 லிட் பெப்ஸி அல்லது கோகோ கோலா பாட்டிலை எடுத்து, அதை சரி பாதியாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

Step2

கீழ் பாக பாட்டிலில் அரைப் பாகம் வெதுவெதுப்பான சுடு நீரை ஊற்றவும்.

Step3

அதில் 3/4 கப் பிரவுன் சுகர் எனும் பழுப்பு நிற கரும்பு சக்கரையையும், ஒரு டேபிள் ஸ்பூண் YEAST ம் மிக்ஸ் பண்ணி நன்றாக கரைக்கவும். (சீனி எனும் சாதா சர்க்கரையையும் பயன்படுத்தலாம்)

Step4

வெட்டி எடுத்த பாட்டிலின் மேல் பகுதியை தலை கீழாக கவிழ்த்து புனல் போல் கரைசல் உள்ள பாட்டிலை மூடவும்.

Step5

இந்த பாட்டிலின் சுற்று சுவரை கறுப்பு நிற காகிதத்தை சுற்றி ஒட்டவும்.

Step6

இந்த கரைசல் உல்ள பாட்டிலை உங்கள் ரூமின் ஒரு மூலையில் வைத்து விடுங்கள். அவ்வளவு தான் நம் வேலை.

இந்த கரைசலில் இருந்து கார்பண்டை ஆக்ஸைடு எனும் வாயு வெளி வந்து கொண்டிருக்கும். இதனால் கொசுக்கள் கவரப்பட்டு இந்த பாட்டிலை நோக்கி படையெடுத்து வந்து பாட்டிலில்ன் உள்ளே செல்லும். அப்போது அங்குள்ள இனிப்பு கரைசலில் ஒட்டிகொண்டு வெளி வர முடியாமல் அங்கேயே சமாதியடையும்.



31 அக்டோபர், 2012

தமிழன் ரொம்ப பொறுமைசாலி தான்

தமிழன் ரொம்ப பொறுமைசாலி தான்
இன்று சரியான மழை ஆதலால் இரு சக்கர வாகனத்தை வீட்டிலேயே விட்டு விட்டு பஸ்ஸில் ஆபிஸ் போகலாம் என 116A kkd nagar இல் இருந்து highcourt செல்லும் பஸ்ஸில் ஏறினேன், பஸ் மின்ட்டை கடந்து cementry road rsrm ஆஸ்பத்திரி தாண்டி சென்று கொண்டிருந்தது .வழியில் ரோடு படு மோசம் மேடும் பள்ளமுமாக இருந்தது .பஸ் சற்று நிலை தடுமாறி பின் ஒரு வழியாக டிரைவர் இன் சாமர்த்தியத்தால் பள்ளத்தை தவிர்த்தது அப்பொழுது எனது பக்கத்துக்கு சீட்டில் அமர்திருந்த ஒருவர் புலம்பி கொண்டே வந்தது எனது கவனத்தை ஈர்த்தது .என்னவென்று  கவனித்தேன். போடுங்கையா வோட்டு இரட்டை இலை யை பார்த்து என இரண்டு முறை சத்தமாக சொல்லிவிட்டு இருந்தாலும் தமிழன் ரோபா பொறுமைசாலி தான்யா பவர் கட் ,டிக்கெட் விலை ,பால்விலை என எல்லாத்தையும் ஏத்திட்டாங்க நல்ல ரோடு கூட கிடையாது அந்தம்மா சீட்ல உக்காந்து என்ன தான் பண்ணுதுன்னு தெரியல, எங்க கேரளா வுல எல்லாம் இந்த மாதிரி இருந்தா நேராக கோட்டையை முற்றுகையிடுவோம்.என்று விலாசிக்கொண்டிருந்தார் ,அக்கம் பக்கம் அனைவரும் ஆ வென அவர் பேசியதை பார்த்து கொண்டிருந்தனர் .மேயர் சுப்பிரமணி இருந்த போது மாநகராட்சி சுத்தமா இருந்துச்சி இப்போ யாரு மேயர் ன்னு கூட தெரியல. என்ன ஒரு சாபக்கேடோ இந்த தமிழனுக்கு.http://nikhiraagam.blogspot.comnikhiraagam.blogspot.com/2012/10/blog-post_31.html
Related Posts Plugin for WordPress, Blogger...
Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner