பல்சுவை உணவகம்

Blogger Widgets

01 டிசம்பர், 2012

காவிரி நீர் பிரச்னையில் தமிழகத்தை கர்நாடகா வஞ்சித்து விட்டது|Tamil Nadu Karnataka on Cauvery water dispute has betrayed - Dinakaran

காவிரி நீர் பிரச்னையில் தமிழகத்தை கர்நாடகா வஞ்சித்து விட்டது|Tamil Nadu Karnataka on Cauvery water dispute has betrayed - Dinakaran





மத்திய  கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன், அவர்கள்
காஞ்சிபுரம் காந்தி ரோட்டில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து
நிருபர்களுக்கு அளித்த பேட்டி
காவிரி நதிநீர் பங்களிப்பில் கர்நாடகம் வஞ்சித்தது இப்ப தான் உங்களுக்கு
தெரியுமா?
ஏன் சாமி மேல தான இருக்கீங்க...!, இதுக்கு ஒரு முடிவு  கட்ட முடியலியா ?
உங்களால,   அது  சரி மெயின் தலையே ஒன்னும் பண்ண முடியாம தவிக்குது

கன்னட சகோதரர்களே;
தமிழக மக்கள் மிக பொறுமையுடன் இருக்கிறார்கள்,எங்களின் குமுறல்கள்
எரிமலையாய் வெடிக்கும் காலம் வெகு விரைவில் வரும்.

நேற்று அதிகாலை 3 மாவட்டங்களில் நிலநடுக்கம் | Earthquake held in 3 districts yesterday dawn among salem district. | Thinaboomi.com

நேற்று அதிகாலை 3 மாவட்டங்களில் நிலநடுக்கம் | Earthquake held in 3 districts yesterday dawn among salem district. | Thinaboomi.com


நானு எப்பவும் சாப்புடுறதுக்கு முன்னாடி, காக்காவுக்கு உணவு வைத்து
விட்டு தான் நான் சாப்பிடுவேன்.
நேற்றும் அதே போல் மத்தியான சாப்பாடு
காக்காவுக்கு வைக்கிறேன்.சாப்ட்டுட்டு ரொம்ப நேரமா அரக்க பறக்க, கா கா ன்னு கத்திக்கிட்டு இங்குட்டும் அங்குட்டும் போயிட்டு போயிட்டு வந்துச்சு ஜன்னல்கிட்ட!எனக்குன்னா பயம்!!!
 என்னடா இது ஒரு வேலை கடன்காரன்
எவன்னா வர்ரானா ன்னு,ஏன்னா ஏற்கெனவே கடன்காரன் வர்றதுக்கு
முன்னாடி இப்பிடித்தான் கத்துச்சு. ரெண்டு மூணு வாட்டி இந்த மாதிரி நடந்து
இருக்கு! ஆனா இன்னைக்கி கத்துனதுக்கு ஒண்ணுமே நடக்களியேன்னு
யோசிச்சுக்கிட்டே இருந்தேன்,பார்த்தா இந்த நில அதிர்வுக்குதான் காக்கா
கத்திருக்கும் போல தெரியுது.
ஆனா சொன்னா நீங்க நம்பமாட்டிங்க நானு
ஆபீஸ் வேலைய முடிச்சிட்டு வீட்டுக்கு போனேன். நைட்டு சாப்பாட்ட முடிச்சுட்டு  எம்பொண்ணு ரொம்ப நேரமா ஆடிட்டு தூங்கிருச்சி என் வீட்டுக்காரியும் தூங்கிட்டா அப்ப மணி பன்னண்டு இருக்கும்,
நானு சிஸ்டத்துல உக்காந்தேன்! ஒன்றை மணி இருக்கும் அப்ப திருப்பியும் காக்கா
கத்துச்சு பயந்துட்டேன். ஏன்னா ஒரு காக்கா ன்னா ஒன்னும் தெரியாது,  இது
நாலஞ்சு காக்கா கத்துது.அப்பத்தான் நானும் அந்த நில அதிர்வ உணந்தேன்.
அருவதடி ராட்னம் உச்சத்துல இருந்து இறங்குமே அந்நேரம் நம்ம அடி வயிறெல்லாம் கலங்குமே! அந்த அனுபவத்தை அனுபவிச்சேன். தலையெல்லாம் சுத்துது, வாந்தி வர்றதுக்கு முன்னாடி எச்சி ல்லாம்  ஊருமே!
அதேமாதிரி இருக்கு.விபரீதம் ஏதோ நடக்க போகுதுன்னு மட்டும் புரியுது
நானே பயந்த சுபாவம் சொல்லனுமா என்ன டக்குன்னு போயி லைட்ட போட்டேன்.எம்பொன்னும் வீட்டுக்காரியும் நல்லா தூங்குறாங்க:அப்பறம் பயந்துக்கிட்டே உக்காந்தேன் கிட்டதட்ட ஒரு மூணு நிமிஷம் நீடிச்சது இந்த
நிலஅதிர்வு ,அதுக்கப்புறம் நான் எல்லாத்தையும் ஆப் பண்ணிட்டு புரண்டு பொரண்டு படுத்து நாலு மணிக்கி மேல தான் தூங்கினேன்.காலைல ஒம்போது
மணிக்கி தான் எந்திரிச்சேன்.

 நைட்டு நடந்தத ஏன் வீட்டுக்காரிகிட்ட சொன்னா
அவ, ஏங்க? என்னையவும் எளுப்பிருக்கலாம்ள ? நான் இது வரை க்கும் நிலநடுக்கத்தை பார்த்ததே இல்லங்க!!!.ங்குறா.எவ்ளோ சேட்டைய பாத்திங்களா?


சரி கோவிச்சுக்காதிங்க! இந்த வாரம் யோகா பத்தின பதிவ எழுத முடியல,
அதனால இப்பிடி ஒரு பதிவு.பிடிச்சி இருந்தா கருத்தை சொல்லுங்களேன்.
Related Posts Plugin for WordPress, Blogger...
Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner