பல்சுவை உணவகம்

Blogger Widgets

13 டிசம்பர், 2013

குடியின் சீரழிவுகள்









அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்!!!
இந்த பதிவு குடியை பற்றிய பதிவு குடியால் உடலும், உள்ளமும் எத்தனை சீரழிவுகளை சந்திக்கின்றன பாருங்கள்.

குடிப்பழக்கம், சிறிது சிறிதாக செய்யப்படும் தற்கொலை முயற்சியே!
உடல் நலத்தைப் பலவிதங்களில் கெடுத்து, வாழ்க்கை நெறிமுறைகளையும் சிதைத்து, அவரின் மனநலத்தையும் வெகுவாக பாதிக்கிறது. அவரின் போக்கால் மனைவி மக்களும் மிகுந்த துன்பத்திற்கு ஆளாவதுடன் அவர்களின் எதிர்காலமும் கேள்விக் குறியாகிறது.
* குடிப்பழக்கத்திற்கான பல காரணங்களில் கூடா நட்பும் சூழ்நிலைகளும் சமூகக் கலாசாரங்களும் முக்கியமான தூண்டுகோல்களாக அமைகின்றன.
* பெற்றோர் மற்றும் உடன் பிறந்தோரின் குடிப்பழக்கமும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். முதலில் ‘நண்பர்களுக்காக’ என்று சிறிதளவு மது அருந்த ஆரம்பிப்பதே நாளடைவில் மது அடிமை நிலைக்குக் கொண்டு சேர்த்துவிடும்.
* சாராயம், கள் மற்றும் அயல்நாட்டு மதுவகைகள் போன்றவற்றில் உள்ள போதையூட்டும் பொருளின் பெயர் ஈத்தைல் ஆல்கஹால். இது ஒவ்வொரு மதுவகையிலும் வெவ்வேறு அளவில் உள்ளது. மதுவில் உடலைப் பாதுகாக்கும் வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் என ஏதும் இல்லை.

சிறிதளவு மது அருந்தியவுடன் ஒருவித கேளிக்கை மனப்பான்மையும் போலியான மன மகிழ்ச்சியும் ஏற்படுவதால், அந்தச் சூழ்நிலையில் மதுவின் அளவை மேலும் கூட்டிச் சாப்பிடும் நிலை ஏற்படுகிறது. அதனால் நாளடைவில் தனது செயல்களைக் கட்டுப்படுத்தும் திறனை இழந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் சக்தி அற்றவர் ஆகிவிடுகிறார். மது அருந்தி விட்டு ஓட்டும் போது விபத்துக்கு ஆளாகி விபரீதமான விளைவுகளைச் சந்திக்கிறார்.
* சில சமூக விரோதிகள் மித்தைல் ஆல்கஹால் என்றநச்சு கலந்த விஷச் சாராயத்தை அதிக போதை ஏற்படும் என்று நம்பி விற்பதால், அதைக் குடிப்பவர்கள் கண் பார்வை இழப்பதுடன் மரணத்தையும் தழுவுகிறார்கள்.
* மதுப்பழக்கத்தினால் சிரோஸிஸ் என்னும் கல்லீரல் சுருக்க நோய் ஏற்பட்டு ரத்த வாந்தியும் மரணமும் நேரலாம்.
* உணவுக் குழாய், வயிறு மற்றும் கணையம் பாதிக்கப்படுவதால் வயிற்று வலி மற்றும் நீரிழிவு நோய் உண்டாகலாம்.
* கண் மற்றும் நரம்பு மண்டலம் பல விதங்களில் பாதிக்கப்படலாம்.

மாரடைப்பு நோய் மற்றும் பக்கவாதம் போன்ற ஆபத்தான பின் விளைவுகள் ரத்தக் குழாய்களின் பாதிப்பால் ஏற்படலாம்.
* நுரையீரலைப் பாதிக்கும் நிமோனியா காய்ச்சல் அடிக்கடி ஏற்படும்.
* அடிக்கடி மனைவியிடம் சண்டையிட்டு குடும்ப அமைதியை இழந்துவிடுவார்கள். அடிக்கடி குற்ற உணர்வுகளுக்கு ஆளாகி, தன்னம்பிக்கையை இழந்து அவதிப்படுவார்கள்.
* நினைவாற்றலும் குறைந்துவிடுவதால் சற்று நேரத்திற்குமுன் நடந்ததுகூட நினைவில் இருக்காத சூழ்நிலை உருவாகலாம்.
* குடிக்கு அடிமையானவர் குடிப்பழக்கத்தை நிறுத்திய சில மணி நேரத்திலேயே உடல்நடுக்கம், பயம், பதட்டம், மனத் தளர்ச்சி, எரிச்சல், தூக்கமின்மை, ரத்த அழுத்தம் அதிகமாகுதல் மற்றும் வலிப்பு ஆகியவை ஏற்படலாம்.
* மாய ஒலி, மாயத் தோற்றம், மாயத் தொடு உணர்வு முதலியவை நோயாளிக்குத் தோன்றலாம். வேடிக்கையான கொடிய மிருகங்கள் போன்ற மாயத் தோற்றங்களால் பயந்து, தம்மை அவற்றிடம் இருந்து காப்பாற்றும்படி கூறி அழுவார்கள். சில சமயங்களில் பயத்தால் தற்கொலைக்கும் முயற்சிப்பார்கள். பிறரைத் தாக்கவும் கூடும். எனவே நோயாளியை மருத்துவரிடம் தாமதிக்காமல் கொண்டு செல்ல வேண்டும்.
குடிப்பழக்கத்தில் இருந்து விடு படுவது எப்படி…?
குடிப்பழக்கத்தில் இருந்து எப்படியாவது மீள வேண்டும் என்ற உறுதியான எண்ணமும் நோயாளியின் பூரண ஒத்துழைப்பும் மிக முக்கியமானது. நீண்ட நாள் மதுப்பழக்கம் உள்ளவர்கள் மருத்துவக் கண்காணிப்பின் பேரில்தான் அந்தப் பழக்கத்தை நிறுத்த வேண்டும். அந்த நேரம் நோயாளிக்கு ஏற்படும் பயம், பதட்ட நிலை, உடல் நடுக்கம், போன்றவற்றைத் தடுக்க மருத்துவர் தேவையான மருந்துகளையும் வைட்டமின்களையும் தேவையான ஊட்டச்சத்தையும் தவறாமல் கொடுப்பார். அடுத்த நிலையில் நோயாளிக்கு மதுவை அருந்தும் ஆசையே ஏற்படாதபடி சிகிச்சை அளிப்பதுதான் மிக முக்கியமாகும்.
நவீன மருத்துவத்தில் மருந்துகள் பல உள்ளன. அவற்றில் உடலுக்கு ஏற்புடையதாக இருக்கும் மருந்தை மருத்துவர் சுமார் ஒரு வருட காலம் சாப்பிட சொல்வார்.
மனதில் நம்பிக்கையும் தைரியமும் உருவாகி மீண்டும் வாழ்வில் அவர்களுக்கு பிடிப்பு ஏற்படுகிறது. பிறகு, பொறுப்பு உணர்ச்சியும் பிறருக்கு உதவ வேண்டும் என்ற நல்லெண்ணமும் ஏற்பட்டு, நாளடைவில் முழுவதும் குணமடைகிறார்.

நன்றி...
மீண்டும் சந்திப்போம்.

09 டிசம்பர், 2013

குழந்தை பராமரிப்பு



குழந்தை பராமரிப்பு பற்றி தெரிந்து கொள்வோம்,

அன்பு நெஞ்சங்களே! வணக்கம்,
எனது நண்பர் facebook இல் இந்த நல்ல விஷயம் பகிர்ந்துள்ளார். அதை அப்படியே உங்களுக்கு விருந்தாக்குகிறேன்,படித்து பயனுறுக.

ஒவ்வொரு பருவத்திலும் குழந்தையின் உடல் எடையும் உயரமும் மூளை வளர்ச்சியும் சராசரியாக எவ்வளவு இருக்க வேண்டும்?
காலம் அளவு
(மாத, வயது முடிவில்) (கிலோ கிராமில்)

பிறந்த குழந்தை 3
5 மாதம் 6
12 மாதம் 9
இரண்டு வயது 12
மூன்று வயது 15
ஐந்து வயது 18
ஏழு வயது 21
பத்து வயது 30
பன்னிரண்டு வயது 36

இந்திய குழந்தைகள் இருக்க வேண்டிய சராசரி உயரம் :
- பிறந்தவுடன் 50செ.மீ
- 12 மாத முடிவில் 75செ.மீ
- 36 மாத முடிவில் 99செ.மீ
- 12 வயது முடிவில் 133செ.மீ
குழந்தையின் மூளை வளர்ச்சி :
முதல் மாதத்தில் :
சத்தம் வரும் பக்கம் தலையைத் திருப்பும்

2-வது மாதத்தில் :
மற்றவர்களைப் பார்த்து சிரிக்கும்

- 3-வது மாதத்தில்
தலை ஆடாமல் நிற்கும். தாயைத் தெரிந்து கொள்ளும். சத்தங்களை எழுப்பும்.

- 5-வது மாதத்தில்
நன்றாகப் புரளும். மற்றவர்களுடைய உதவியுடன் உட்கார முடியும்.

- 6-வது மாதத்தில்
தன் உருவத்தைக் கண்ணாடியில் பார்த்துச் சிரிக்கும். ‘மா’, ‘பா’ போன்ற ஓர் எழுத்து ஒலிகளை எழுப்பும்.

- 7-வது மாதத்தில்
மற்றவர்களுடைய உதவி இல்லாமல் உட்காரும்.

- 8-வது மாதத்தில் தவழும்.

- 9-வது மாதத்தில்
மற்றவர்கள் உதவியுடன் நிற்கும் ‘மாமா’, ‘பாபா’ போன்ற இரண்டு எழுத்து சொற்களைச் சொல்லும் ‘டாட்டா’ சொல்லும்.

- 10-வது மாதத்தில்
மற்றவர்கள் உதவியுடன் தளர்நடை நடக்கும்.

- 12-வது மாதத்தில்
மற்றவர்களுடைய உதவி இல்லாமல் நிற்கும் அர்த்தம் தரும் இரண்டு வார்த்தைகளைச் சொல்லும்.

- 13-வது மாதத்தில்
மற்றவர்களுடைய உதவி இல்லாமல் நடக்கும்.

- 24-வது மாதத்தில்
மாடிப்படி ஏறும். சிறு வாக்கியங்களைப் பேசும்.

- 36 வது மாதத்தில்
மூன்று சக்கர சைக்கிள் ஓட்டும்.
* கால்சியம், பாஸ்பரஸ் வைட்டமின் ‘சி’ மற்றும் ‘டி’ அதிகம் உள்ள பால், பழம், பச்சைக் காய்கறிகள் மற்றும் மீன், முட்டை போன்றவற்றைபாலூட்டும் தாய்மார்கள் உட்கொண்டால் குழந்தைக்குப் பல் முளைத்தலில் சிரமம் இருக்காது.
* பல் முளைக்கும் பருவத்தில் குழந்தையின் கை நகங்களையும், விரல்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் விஷக் கிருமிகள் குடலினுள் சென்று வயிற்றுப் போக்கு ஏற்படும். பல் துலக்கும் நல்ல பழக்கத்தை இரண்டாம் வயது இறுதியில் துவக்குவது நலம். அதுவரையில் உணவு உட்கொண்ட பிறகு – முக்கியமாக செயற்கை இனிப்புப் பண்டங்களை உண்ட பிறகு தண்ணீர் விட்டு வாயைக் கழுவினாலே பற்கள் தூய்மையாகும்.
* ஆறு மாதத்தில் ஆரம்பித்து 24 மாதத்துக்குள் தற்காலிகமான இருபது பற்களும் முளைத்துவிடும். தற்காலிகப் பற்கள் இருபதும் ஆறு வயதில் இருந்து 12 வயதுக்குள் விழுந்து அதற்குப் பதில் 28 நிரந்தரப் பற்கள் முளைத்துவிடும். நிரந்தரப் பற்கள் மொத்தம் 32. அதில் கடைசி கடைவாய்ப் பற்கள் நான்கும் 25 வயதில் முளைக்கும்.
குழந்தை உணவு
* பிறந்த குழந்தைக்கு, முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். குழந்தைக்குத் தாய்ப்பால்தான் மிகச் சிறந்த மலிவான, பாதுகாப்பான, எளிதில் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்து உணவு. பிரசவித்தவுடன் சுரக்கும் பால் மஞ்சள் நிறத்தில் பிசுபிசுப்புடன் இருக்கும். இதைச் சீம்பால் என்பார்கள். இதில் பல ஊட்டச் சத்துக்களும், நோய் எதிர்ப்பு தன்மைகளும் இருப்பதால் இதைத் தவறாமல் குழந்தைக்கு ஊட்ட வேண்டும்.

* பிறந்த குழந்தையைத் தொட்டிலில் போடாமல் தாய் தன் அரவணைப்பில், படுக்க வைத்துக் கொள்ள வேண்டும். தொட்டிலிலோ தூளியிலோ போடும் பழக்கம் நல்லது அல்ல.
* குழந்தை பிறந்ததும், சர்க்கரை, தேன் ஆகியவை கலந்த நீர், வெண்ணெய் போன்றஎதுவும் வேண்டாம். வெயில் காலத்தில் மட்டும் கொதித்து ஆறிய சுத்தமான நீரை ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறைசுமார் 15 மி.லி கொடுக்கலாம். வைட்டமின் மற்றும் இரும்புச் சத்து மருந்துகளை, தேவைப்பட்டால் மட்டும் மருத்துவ ஆலோசனையுடன் கொடுக்கலாம்.
* தாய்ப்பால் கொடுக்க முடியாதவர்கள் பசும்பாலில் இரண்டு பங்கும் தண்ணீரில் ஒரு பங்கும் சேர்த்துக் கொதிக்க வைத்து ஆறவைத்த பிறகு சிறிதளவு சர்க்கரையை சுவைக்குச் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.
* குழந்தைக்குப் பால் ஊட்டி முடித்தவுடன் படுக்கையில் போட்டால், பாலைக் கக்கிவிடும். பால் ஊட்டியவுடன் குழந்தையைத் தோளில், அதன் முதுகில் லேசாகத் தட்டிக் கொடுத்தால் ஏப்பம் விடும். ஏப்பம் விட்ட பிறகு படுக்கையில் விட்டால் பாலைக் கக்காது.
பாலுடன் பிறஉணவுகள்
தாய்ப்பாலை சாதாரணமாக ஒன்பது மாதத்திலிருந்து ஒரு வருடம் வரை கொடுத்து வருவது நல்லது.
* ஆறாவது மாதத்தில், தாய்ப்பாலுடன், சிறிதளவு கோதுமை மற்றும் அரிசி, பருப்பு, கலந்த காரம் இல்லாமல் தயாரித்த உணவை ஊட்டலாம். மேலும் மசிந்த உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், கீரை ஆகியவற்றையும் கொடுக்கலாம்.
* ஒன்பதாவது மாதத்தில் மேற்கூறியவற்றுடன் வேகவைத்த முட்டையின் மஞ்சள்கரு, கனிந்த வாழைப்பழம், ஆப்பிள், பப்பாளி, மாம்பழம், ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளம்பழம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு பழத்தின் சாறு ஆகியவற்றைக் கொடுக்கலாம்.
* பத்தாவது மாதத்தில், இட்லி, தோசை, போன்றவற்ûயும் ஊட்டலாம்.
* பதினொன்றாவது மாதத்தில், வேகவைத்த முட்டையின் வெள்ளைக் கருவையும் கொடுக்கலாம்.
* பன்னிரண்டாவது மாதத்திலிருந்து பெரியவர்கள் சாப்பிடும் அனைத்து உணவுகளையும் குழந்தைக்கு சாப்பிடக் கொடுக்கலாம்.
* அரிசி, கோதுமை, கேழ்வரகு, பொட்டுக் கடலை போன்ற உணவுகளை சர்க்கரையைக் கலந்து கொதிக்க வைத்துக் கஞ்சியாகக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
* புதுவகை உணவைக் கொடுக்கும் போது பழக்கமான உணவைக் கொடுப்பது போல ஒட்டு மொத்தமாக அதிகம் கொடுக்கக் கூடாது. எந்தப் புதுவகை உணவையும் தினமும் ஒருமுறைசிறிதளவு கொடுத்துப் பழக்கிய பிறகே, அந்த உணவின் அளவை அதிகப்படுத்த வேண்டும்.
* பிறந்த குழந்தைகளுக்கு எரி சாராயத்தில் (ஸ்பிரிட்) நனைத்த பஞ்சால் தொப்புளை லேசாகத் தொட்டு சுத்தம் செய்யலாம். தொப்புளிலிருந்து சீழ் அல்லது ரத்தம் வந்தால் உடனே மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.
* பிறந்த இரண்டாவது நாளிலிருந்து ஐந்து நாட்களுக்குள் பெரும்பாலான குழந்தைகளின் கண்களும் உடலும் லேசான மஞ்சள் நிறமாக மாறலாம். குழந்தை பிறந்த பிறகு அதனுடைய கல்லீரலின் செயல் திறன் முழுமை பெற10 – 15 நாட்கள் ஆகும் என்பதால், மஞ்சள் நிறமாற்றம் குழந்தையின் உடலில் ஏற்படுகிறது. இது இரண்டு வாரங்களுக்குள் சரியாகிவிட வேண்டும். பதினைந்து நாட்களுக்குப் பிறகும் உடல் மஞ்சள் நிறமாக இருந்தால் அது “மஞ்சள் காமாலை” நோயாக இருக்கலாம்.
* பிறந்த இரண்டு நாட்களுக்கு குழந்தை அடர் கரும்பச்சை நிறத்தில் மலம் கழிக்கும். இரண்டு நாட்களுக்குப் பிறகு மலம் மஞ்சளாகவும் இளகியும் இருக்கும். தினமும் ஒன்று முதல் நான்கைந்து முறை மலம் கழிக்கலாம். ஆனால் புட்டிப்பால் குடிக்கும் குழந்தை தினமும் குறைந்த தடவையே மலம் கழிக்கும்.
* சில குழந்தைகள் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறைகூட மலம் கழிக்கும். அதனால் பிரச்சனை இல்லை. வயிறு உப்புதல் இல்லாமலும் குழந்தை நன்கு உணவு உண்டும் சுறுசுறுப்புடனும் இருந்தால் மலம் கழித்தலில் ஒரு கோளாறும் இல்லை. குழந்தையின் உடல் எடை வயதுக்கேற்றஅளவு இருக்க வேண்டும். மேலும் தண்ணீர், பழரசம் இவற்றைக் கொடுத்தாலே யாதொரு தடங்கலுமின்றி குழந்தை சுலபமாக மலம் கழிக்கும்.
* குழந்தைக்கு பேதி ஏற்பட்டால் பயந்து கொண்டு தாய்ப்பாலை நிறுத்தக்கூடாது. முதலுதவியாக சர்க்கரை – உப்புச் கரைசல் நீரை அரைமணி நேரத்திற்கு ஒருமுறை 50 மில்லியும் ஒவ்வொரு முறைபேதி ஆனதற்கு பிறகு சுமார் 100 மில்லியும் கொடுக்க வேண்டும். இந்த சர்க்கரை உப்புக் கரைசலை கீழ்க்காணும்படி வீட்டிலேயே தயாரிக்கலாம்.
கொதிக்கவைத்து ஆறவைத்த ஒரு லிட்டர் சுத்தமான நீரில் ஒரு கைப்பிடி சர்க்கரை, மூன்று சிட்டிகை உப்பு, இரண்டு சிட்டிகை சோடா உப்பு, இளநீர் 100 மில்லி ஆகியவற்றைக் கலந்து கொள்ள வேண்டும். பேதி நிற்கும் வரை உபயோகிக்க வேண்டும்.
இத்தகைய கரைசல் மாவு, மருந்துக் கடைகளில் எலக்ட்ரால் மற்றும் எலக்ட்ரோபயான் என்ற பெயர்களில் கிடைக்கின்றன.
* பேதியாகும் போது குழந்தையின் உச்சிக் குழி அமுங்கி இருத்தல், குழந்தை உணவு உண்ணாதிருத்தல், கண் சொருகிவிடுதல், வலிப்பு, அதிக ஜுரம், மூச்சு வேகமாக விடுதல், வயிறு உப்புதல் ஆகியவை இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.
குழந்தைகளுக்கு சுகாதாரம்
* கைகளை சுத்தமான சோப்பு போட்டுக் கழுவிய பிறகுதான் குழந்தைக்குரிய உணவைத் தயாரிக்க வேண்டும். கொதிக்க வைத்து ஆறிய நீரைதான் உபயோகிக்க வேண்டும். சுத்தமான பாத்திரங்களையே பயன்படுத்த வேண்டும்.
* புட்டிப்பால் கொடுத்தால் புட்டி, ரப்பர் சூப்பிகள் ஆகியவற்றைக் கொதிநீரில் போட்டு சுத்தப்படுத்திய பிறகே உபயோகிக்க வேண்டும். பாட்டிலில் மிஞ்சிய பாலை மீண்டும் உபயோகிக்கக் கூடாது.
* குழந்தைகளைக் குளிப்பாட்டுவதற்கு மிருதுவான பேபி சோப்பை உபயோகிக்கலாம். சுத்தமான துணிகளையே உபயோகிக்க வேண்டும்.
* குழந்தையைக் குளிப்பாட்டும் போது அதனுடைய மூக்கில் ஊதக்கூடாது. கண்கள் மற்றும் காதுகளில் எண்ணெய் ஊற்றக் கூடாது. குழந்தையின் தொண்டையில் இருந்து சளி எடுப்பதாகக் கூறி சுத்தமில்லாத விரல்களை குழந்தையின் வாயில் வைக்கக் கூடாது. குழந்தைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டக் கூடாது. குளிப்பாட்டியவுடன் புகைப்போடக் கூடாது.
* குழந்தை சிறுநீர் மற்றும் மலம் கழித்தவுடன் சுத்தமான வேறு துணிகளை உடனுக்குடன் மாற்ற வேண்டும்.
* குழந்தையின் கை நகங்களை வெட்டிவிட வேண்டும். அது வாயில் வைக்கும் பொருட்கள் சுத்தமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு அளிக்கும் உணவை மூடிவைத்து ஈ, பூச்சி ஆகியவற்றில் இருந்து பாதுகாக்க வேண்டும்.
* குழந்தைக்கு உதட்டோடு உதடு சேர்த்து முத்தம் கொடுக்கக் கூடாது. ஜுரம் இருப்பவர்கள், இருமல் தும்மல் வரும்போது இரண்டு கைகளாலோ, கைக்குட்டையாலோ முகத்தைத் தவறாமல் மறைத்துக் கொள்ள வேண்டும். 
நன்றி மீண்டும் சந்திப்போம் .
Related Posts Plugin for WordPress, Blogger...
Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner