பல்சுவை உணவகம்

Blogger Widgets

14 அக்டோபர், 2012

நான் படித்தது 4





டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் கூறியது:

டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் கூறியது:
டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகளை மறைப்பதிலேயே தமிழக அரசு ஆர்வம் காட்டுகிறது. டெங்குவால் பாதிப்பு எதுவும் இல்லை என்னும் பல்லவியைத்தான் அமைச்சர்களும் பாடுகின்றனர்.
டெங்கு காய்ச்சல் தீவிரமாகப் பரவி, பலர்
இறந்துள்ள காரணத்தால் மத்திய அரசின் நல்வாழ்வுத் துறை அமைச்சரே தமிழகத்துக்கு வந்து அக்கறை காட்டிச் சென்றுள்ளார்.
வீரபாண்டி ஆறுமுகம் மீது எடுக்கப்பட்ட குண்டர் சட்ட நடவடிக்கையை நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. அதிமுக அரசின் பழிவாங்கும் செயலுக்குப் பெரிய அடியாகும் இது.
மக்கள் நலப் பணியாளர்களைப் பழிவாங்குவதே தங்களுடைய லட்சியம் என்று அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. இது நல்லதல்ல.
திமுக ஆட்சியின்போது மின்வெட்டு பற்றி ஒன்றிரண்டு செய்தி வரும்போதெல்லாம் தோள்
தட்டிக் கோபமாகப் பேசியவர் இப்போதைய மின்சாரத் துறை அமைச்சர். இப்போது மின்சாரக் குறைபாட்டைப் பற்றி பேசாமல் திரை போட்டுக்கொண்டிருக்கிறார்.
காவிரிப் பிரச்னை தொடர்பாக திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என்றார் கருணாநிதி.

கருத்துகள் இல்லை:

Related Posts Plugin for WordPress, Blogger...
Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner